Header Ads



மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கவே, மிளகாய் தூள் தாக்குதல் நடத்தினேன் - பிரசன்ன ரணவீர

மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கவே தான் நாடாளுமன்றத்தில் மிளாகாய் தூள் தாக்குதல் நடத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பிரசன்ன ரணவீர தெரிவி்த்துள்ளார்.

களனியில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மிளகாய் தூள் தாக்குதல் நடத்தியதாக அனைவரும் கூறுகின்றனர், ஆனால் எதற்காக அதனை செய்தேன் என யாரும் கூறுவதில்லை.

மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க சிலர் நாற்காலியை தூக்கி அடித்தனர். புத்தகங்களை கொண்டு தாக்கினர்.

போத்தல்களில் தாக்கினர். சரிபட்டு வராதது என்று நான் மிளகாய் தூளை கொண்டு தாக்கினேன்.

மீளகாய் தூள் பட்டதும் கரு ஜயசூரிய எழுந்து சென்று விட்டார் எனவும் பிரசன்ன ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.