Header Ads



சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு


விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் இன்று முற்பகல் ஆஜரான இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சுமார் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வௌியேறியுள்ளார். 

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (02) முற்பகல் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தார். 

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டித் தொடரின் இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணம் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதனடிப்படையில் இன்று காலை 9 மணிக்கு அவர் விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தார்.

No comments

Powered by Blogger.