Header Ads



75 கள்ள வாக்குகள் போட்டதாக தெரிவித்த, சிறிதரனிற்கு எதிராக முறைப்பாடு

75 கள்ள வாக்குகள்  போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் தொடர்பான முறைப்பாட்டு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும், சட்டத்தரணியுமான செலஸ்ரீன் ஸ்ரானிஸ்ஸாஸ் என்பவராலே மேற்படி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாம் 2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 75 கள்ள வாக்குகள் போட்டதாக கூறியிருந்த கருத்து தொடர்பாகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்று புதன்கிழமை மாலை குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டு செய்யப்பட்டதற்கான ஆத்தாட்சியுடன் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அவர் முறைப்பாடு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

No comments

Powered by Blogger.