Header Ads



ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமாக, இருந்தாலும் 6 மாதங்களுக்கு கவிழ்ந்துவிடும் - வஜிர

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அரசாங்கம் அமைக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த முறையும் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்கவில்லை எனவும் தோல்வியடைந்தே அமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ஷரத்தை பயன்படுத்தி அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும். இம்முறையும் அதேபோலவே நடைபெறும் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் தேசிய மற்றும் சர்வதேச பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் 6 மாதங்களுக்கு கவிழ்ந்து விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.