Header Ads



பொதுஜன பெரமுன 3/2 பெரும்பான்மை பெற்றால், துறவறம் செல்வேன் - தொலைபேசி வேட்பாளர் பிரகடனம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று வெற்றி பெற்றாதல், தலைமுடியுடன் துறவறம் பூணப் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் காலி மாவட்ட வேட்பாளருமான பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

தான் இதற்கு முன்னரும் இந்த சவாலை விடுத்துள்ளதாகவும் அது எதிர்காலத்திற்கு பொருந்தும் எனவும் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பந்துலால் பண்டாரிகொட, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.

No comments

Powered by Blogger.