Header Ads



யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் சஜித் இன்றுமுதல் 3 நாள்கள் முகாமிட்டு தொடர் பிரசாரம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ (1) இன்று முதல் 3 நாள்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இன்று சாவகச்சேரியில் பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து, யாழ் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால் மண்டபம், தாவடி வேலுவிநாயகர் விளையாட்டுக் கழகம் ஆகிய இடங்களில் அவரின் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து, 2ஆம் திகதி – வட்டுக்கோட்டை வழக்கம்பரை அம்மன் கல்யாண மண்டபம், மானிப்பாய் பிரதேசசபை மண்டபம், சாவற் காடு மகாத்மா சனசமூக நிலையம், காங்கேசன் துறை இராஜேஸ்வரி மண்டபம், உடுப்பிட்டி சித்திவிநாயகர் கல்யாணமண்டபம், இராஜ கிராமம் – நெல்லியடி, பருத்தித்துறை, ஊர் காவற்றுறை அனுசா கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் நடக்கும் பிரசார கூட் டங்களில் கலந்துகொள்வார்.

3ஆம் திகதி கிளிநொச்சி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் அவர்கலந்துகொள்வார்.

No comments

Powered by Blogger.