Header Ads



3 வாரங்களில் மத்தியகிழக்கு நாடுகளில் 12 இலங்கையர்கள் கொரோனாவுக்கு பலி

மத்திய கிழக்கு நாடுகளில் கொவிட் 19 காரணமாக கடந்த மூன்று வாரங்களில் மேலும் 12 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதன் காரமாக கொவிட் காரணமாக உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

ஜூன் 19ம் திகதி வரை மத்திய கிழக்கில் தொழில்புரியும் 23இலங்கையர்கள் உயிரிழந்தனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் மங்களரந்தெனிய தெரிவித்துள்ளார்.

ஐக்கியஅரபு இராச்சியம்;, சவுதி அரேபியா குவைத் கட்டார் லெபனான் ஒமான் ஆகிய நாடுகளில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் இருவரே பெண்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உயிரிழந்த 35 இலங்கையர்களினதும் இறுதிசடங்குகள் சுகாதார கரிசனைகள் காரணமாக அந்தநாடுகளிலேயே இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையை உணர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் அதற்கான அனுமதியை வழங்கினர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.