படிப்பறிவு இல்லாத குருணாகல் மேயரினாலே 2 வது, புவனேகபாகுவின் அரச மண்டபம் தகர்ப்பு
போத்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் மட்டுமல்லாது யாழ்ப்பாண ராஜ்ஜியத்தின் ஆரிய சக்கரவர்த்திகள் கூட கை வைக்காத இரண்டாவது புவனேகபாகுவின் அரச மண்டபத்தின் மீது குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்ஜீவ கை வைத்துள்ளார் என பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
படிப்பறிவு இல்லாததே அவரது இந்த செயலுக்கு காரணம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
குருணாகல் மாநகர மேயர் ஆரியச் சக்கரவர்த்திகளை விட முன்நோக்கி சென்றுள்ளார். கிராமங்களில் இருக்கும் படிப்பறிவு இல்லாதவர்களை இப்படியான இடங்களுக்கு அனுப்பினால், இவ்வாறான சம்பவங்களே நடக்கும்.
குருணாகல் மாநகர மேயர் தான் 8 ஆம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாதவர் என்பதை நிரூபித்துள்ளார் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment