2 வேட்பாளர்கள் சஜித்துடன் இணைவு
(செ.தேன்மொழி)
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தின் சுயட்சை வேட்பாளர் ஒருவரும் , ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதியின் வேட்பாளர் ஒருவரும் இணைந்துக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை -13- இவர்கள் இவ்வாறு இணைந்துக் கொண்டுள்ளதுடன் , இது தொடர்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்நாயக்க மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கிலே இவர்கள் இவ்வாறு இணைந்துக் கொண்டுள்ளனர். இதன்போது கொழும்பு மாவட்டத்தில் சுயேட்சை குழு இலக்கம் 4 போட்டியிட்ட ஜீவன் வீரசிங்க என்ற வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செய்படபோவதாகவும் அறிவித்தனர்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதியின் வேட்பாளர் ஆரியரத்ன வித்தியவசிங்க மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எச்.கே.எரந்தணி ஆகியோரும் இவ்வாறு இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.
VANGUROTHU ARASHIALVAATHIKAL,
ReplyDeleteENDALAVU KUPPAIKAL IRUNDAALUM,
NAATRAMADITHAALUM PARAVAILLALAI
THALAIL KOTTIKOLVAARKAL.