2 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்டியடிப்பு - நாமலிடம் அங்கத்துவம் பெற்றனர்
(அஸ்ரப் ஏ சமத்)
இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஆதரவு வழங்கு முகமாக, குருநாகல் மாவட்ட முஸ்லிம் இளைஞர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் குருநாகல் 'புளூ ஸ்கை' ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் குருநாகல் நகர மேயர் துஷார சஞ்சீவ, முன்னாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அணியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் கல்விக்கான தேசிய இணைப்பாளருமான சாபிர் மன்சூர், மாவத்தகமை பிரதேச சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ஏ.ஆர்.எம். ரிபால், 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில், வடமேல் மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட இளைஞர் யுவதிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் எஸ்.எப். ரமீஸா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் எம்.எச்.எம். ரிஷாட் ஆகியோர் நாமல் ராஜபக் அவர்களினால் கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
enda muslim pengaluku muham muuduweduku viruppam illayo .ade muslim pengaluku alla muhaththay mooda vaythu vittan.alhamdulillah
ReplyDeleteenda muslim pengaluku muham muuduweduku viruppam illayo .ade muslim pengaluku allah muhaththay mooda vaythu vittan.alhamdulillah
ReplyDeletenot shame for muslim community
ReplyDeletewomens come back ugly politicans
not care of islam progress
using curry leaf for muslim womens for politicans
where is thire parents
foolish people , why going back podajan paramuna , donot know their traits
ReplyDeleteஇந்த இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களும் எந்த district வாப்பா? Thamathu சொந்த ilapathukkaha முஸ்லிம் பெண்களை வீதிக்கு irakkuhindranar... Shame of you all...
ReplyDelete