நீர்கொழும்பில் 21 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்
நீர்கொழும்பு , குரண பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை தனிமைப்படுத்தலுக்காக இரானுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் உள்ள தனது தந்தையை பார்க்கச் சென்றவர்கள் இருவரையையே இரானுவத்தினரால் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் பி.ஆர்.சி. பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நீர்கொழும்பில் பல்வேறு இடங்களில் 21 பேர் தமது வீடுகளில் 14 நாட்கள் தனிமைபுபடுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார். இவர்கள் வெளிநாடுகளிலிருந்தும் தனிமைபுபடுதுதல் முகாம்களிலிலிருந்தும் வந்தவர்கள்.அவர்களை மேலதிகமாக 14 நாட்கள் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவ்வப்பகுதி சுகாதார பரிசோதகர்களினால் கண்கானிக்கப்பட்டு வருவதாககூறினார்.
இவர்கள் நீர்கொழும்பில் தழுபொத்த, பிடிப்பன, கடற்கரைத் தெரு, திபிரிகஸ்கட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
Selva
Post a Comment