Header Ads



2 வது கொரோனா அலையை கட்டுப்படுத்த UNP க்கு வாக்களிக்க ரணில் கோரிக்கை

கோவிட்-19  முதலாவது அலை கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது கட்சியும் ஆதரவு வழங்கியதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

ஆனால், இரண்டாவது கொரோனா அலைக்கு முகம் கொடுப்பதற்கு  அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என அவர் தெரிவித்தார். .

இதனால், பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு எதிர் வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வாக்களிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலைகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் திட்டம் தனது கட்சிக்குள் இருப்பதாக அவர்  தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனம் இரண்டாவது கொரோனா அலை குறித்து எச்சரித்ததாகவும், இரண்டாவது அலை பல நாடுகளில் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.