மத்தியகிழக்கில் 10000 இலங்கையர் வேலை இழப்பு, 40000 பேர் நாட்டுக்குவரை விண்ணப்பம் - நிர்க்கதியானோரை அழைத்துவர திட்டம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்க நிலையை அடுத்து, பல்வேறு நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களது தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிர்க்கதியான நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக, அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருவதற்காக சுமார் 40,000 இலங்கைத் தொழிலாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.
அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, தேவையான வசதிகளை வழங்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முடிவு செய்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இதே கதையைத் தான் கடந்த நாலு மாசமா சொல்லுறாங்க. வாய் பேச்சு மட்டும் தான். நேபாளம், பங்களாதேஷ் எவ்வளவோ மேல்.
ReplyDelete