Header Ads



இளைஞர்களுக்கான YOUTH FOR GROWTH வேலைத் திட்டம்; அம்பாறை மாவட்டத்தில் றிஸ்லி முஸ்தபா ஏற்பாடு

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாடு பூராகவும் உருவாக்கப்பட்டு வரும் YOUTH FOR GROWTH வேலைத்திட்டத்தில் இளைஞர் யுவதிகளை ஒன்றிணைக்கும் முயற்சி அம்பாரை மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி தெரிவாக களமிறங்கியுள்ள வேட்பாளர் மயோன் முஸ்தபா ஜுனியர் -  றிஸ்லி முஸ்தபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றது.

இதில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 18 வயது தொடக்கம் 35 வயதுக்கு இடைப்பட்ட தமிழ் முஸ்லிம் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைத்துக் கொள்ளப்பட இருக்கின்றார்கள்.

இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி, தொழில் கல்வி, தலைமைத்துவப் பயிற்சி, உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, அரச தொழில், உள்ளூர் முயற்சியாண்மைக்கு ஊக்கப்படுத்தும் வேலைத்திட்டம், விளையாட்டு மற்றும் சர்வதேச இளைஞர் உறவுகள் போன்ற பரந்துபட்ட திட்டங்களோடு நமது பிரதேச இளைஞர் யுவதிகளையும் நேரடியாக இணைக்கும் பாரிய வேலைத் திட்டமாகும்.

இவ்வேலைத் திட்டத்தில் இணைந்து எதிர்காலத்தை சிறந்த முறையில் விருத்தி செய்ய அனைத்து இளைஞர் யுவதிகளும் கல்முனையில் அமைந்துள்ள மயோன் முஸ்தபாவின் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு வேண்டப்படுகின்றனர். அல்லது இந்த ஒன்லைன் https://forms.gle/bM7gHNCjTJoytbfp8 இணைப்பினூடாக விண்ணப்ப படிவங்களை பூர்த்திசெய்யவும் முடியும்.

இணைத்துக் கொள்ளப்பட இருக்கின்ற அனைத்து இளைஞர்களுக்குமான விசேட செயலமர்வும் மாபெரும் மாநாடும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் மயோன் முஸ்தபா ஜூனியர் ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டலை இளம் அரசியல் தலைமை ஊடாக பெற்றுக்கொடுக்கும் விஷேட நிகழ்ச்சித் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமலுடன் இணைந்து பணியாற்ற நேரடி வழிகாட்டலோடு அனைவரும்  இணையுங்கள்.

மேலதிக விவரங்களுக்கு 0770375759 அல்லது 0774665789 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

ஊடக பிரிவு

1 comment:

  1. lol, are you joking kid, did you think about your life behind ,are you eligible to give service to people? political is not entertainment,
    your father was rich and was popular but he couldn't grip , do you know why?
    sometime people come for own benefit, being selfish to get something, this is the way people are being cheated by entertaining politician.
    fear Allah, it is responsible Amanath.

    ReplyDelete

Powered by Blogger.