Header Ads



நவீன் திஸாநாயக்க ஒரு விஷமி - UNP யை பிளவுப்படுத்தியது அவர்தான்

ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்தியது நவீன் திஸாநாயக்க தான் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா கயப்புக்கலை பகுதியில் இன்று -25- மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி இணைந்து செயற்பட்டது. ஆனால், நவீன் திஸாநாயக்க போன்ற சில விஷமிகளின் தாக்கத்தால் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலக வேண்டிய தேவை ஏற்பட்டது.

தற்போது சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றோம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.