Header Ads



வெளிநாடுகளில் இருந்து வரும் சகலருக்கும் PCR கட்டாயம் - முடிவுகளை உடனடியாக பெற நடவடிக்கை


வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும் PCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது, PCR பரிசோதனை முடிவுகளை விமான நிலையத்தில் உடனடியாக பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டுக்கு வரும் அனைவருக்கும் PCR பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் PCR பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

எதிர்காலத்தில், PCR பரிசோதனை அறிக்கைகளை விமான நிலையத்தில் உடனடியாக பெற்று, தொற்றுக்கு உள்ளானவர்களை வைத்தியசாலைக்கும் ஏனையவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஜே.ஏ.ஜோர்ஜ்

No comments

Powered by Blogger.