கருணா தொடர்பில் உடனடி, விசாரணையை ஆரம்பிக்க CID க்கு உத்தரவு
கருணா அம்மான் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மேலதிக காவற்துறைமா அதிபர் மூலம் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கருணா அம்மானினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்கள் குறித்து, அவர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பிலே இவ்வாறு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாம் கொரோனாவை விட அபாயம் மிக்கவன் தான் - விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் காலத்தில் 2 அல்லது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவவீரர்களை ஆணையிரவு முகாமிலும், கிளிநொச்சி முகாமிலும் கொன்றுள்ளேன் என அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து தெரிவித்தார்.
இது தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment