Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்தவதில் இலங்கை, வெற்றிகரமான நிலையில் உள்ளது - அமெரிக்கா பாராட்டு

சமீபத்தில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இலங்கை அமெரிக்க உறவுகளிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை -15. தகவல் வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்த அமெரிக்க தூதரக பணியாளர் தொடர்பான தவறான தகவல்கள் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸாரின் நடவடிக்கைகள் போன்ற சம்பவங்கள் அமெரிக்க இலங்கை உறவிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் அமெரிக்க தூதரக பணியாளர் குறித்து வெளிவந்த தகவல்கள் தவறாக வழிநடத்தும் நோக்கத்தை கொண்டவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தூதரக பணியாளர் இலங்கை வருவதற்கு முன்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட நடைமுறைகளை நாங்கள் பின்பற்றினோம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர ஸ்தாபனம் என்ற அடிப்படையில் எங்களிற்கு வழங்கப்பட்ட விதிமுறைகளை நாங்கள் பின்பற்றினோம்,நாங்கள் பிசிஆர் பரிசோதனைகளை மறுக்கவில்லை எனவும் அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தூதரகத்திற்கு அருகில் இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரு சம்பவங்களும் இரு நாடுகளின் மத்தியிலான உறவுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் தூதுவர் தெரிவித்துளளார்.

No comments

Powered by Blogger.