Header Ads



ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

குறித்த மனுக்கள் இன்று (26) விஜித் மலல்கொட, முர்த்து பெர்ணான்டோ மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டன. 

இதன்போது, ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினராக நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன செயற்பட்ட காரணத்தால் குறித்த மனுக்களை வேறு நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்க உத்தரவிட்டப்பட்டது. 

அதன்படி, குறித்த மனுக்களை ஆராய்வதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி அழைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments

Powered by Blogger.