Header Ads



கடும் குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை, மட்டக்களப்பு தீவில் தடுத்துவைக்க நடவடிக்கை

கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை மட்டக்களப்பு தீவில் தடுத்து வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதி, மனித உரிமை மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

சில காலத்திற்கு முன்பு தொழுநோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட மட்டக்களப்பு தீவு தற்போது, இதன் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

இப்போது சுகாதார அமைச்சின் கீழ் உள்ளது இந்த தீவு சிறைச்சாலைத் துறை கையகப்படுத்தியுள்ளது மற்றும் கைதிகளைச் சிறைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.