தோல்வியின் பின் சஜித் பிரேமதாசவை, காட்டிலேயே கண்டுபிடிக்க நேரிடும்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாசவை தோல்வியின் பின்னர் ஹிமாலயா காட்டிலேயே தேடிக்கண்டு பிடிக்க முடிந்தது என அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இம்முறை தேர்தல் தோல்வியின் பின்னர் சஜித் பிரேமதாசவை ஹிமாலயா காட்டிலேயே தேடிக் கண்டுபிடிக்க நேரிடும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அடைந்த தோல்வியை விட மிகப் பெரிய தோல்வியை சஜித் அணியினர் அடைவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment