Header Ads



ஹிஜாஸுடன் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன் கைது செய்யப்பட்ட அவரின் சாரதியும் சுங்க அதிகாரியும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களும் நீதிமன்றத்தின் முன் ஆஜராக்கப்படாத நிலையில், இந்த இருவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.