சிங்கள பௌத்தர்களை இனவாதத்தினையும், மதவேறுபாடுகளையும் நிராகரிக்குமாறு சஜித் வேண்டுகோள்
எனது ஆட்சியில் இனவாதத்திற்கும் பிரிவினை வாதத்திற்கும் இடமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இனவாதமும் பிரிவினைவாதமும் நிலவிய காலம் ஆகஸ்ட் ஐந்தாம் திகதியுடன் முடிவிற்கு வரும் என அவர் பேருவளையில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை பயன்படுத்தி அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட செயற்பாடுகளை முன்னெடுத்தது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தபெருமான் உலகின் அனைத்து உயிரினங்களையும் சமமாககருதவேண்டும் என போதித்ததால் இலங்கை பௌத்த கொள்கைகளை முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது கட்சிகயை சேர்ந்தவர்களே உண்மையான தேசப்பற்றாளர்கள் என தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச சிங்கள பௌத்தர்களை இனமத வேறுபாடுகளை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் அது பௌத்தத்தின் வழியல்ல அது நாட்டை அழிக்கும் வழி எனவும் தெரிவித்துள்ளார்.
PERIYA INAVAATHI CHAMPIKA RANVAKAVAI,
ReplyDeleteIVANUDAYA MADIYIL VAITHUKONDU,
ULARUKIRAAN.
MUSLIMGAL EMAARAMAATTAARKAL.