Header Ads



மக்கள் முன் சென்று கதைப்பதற்கு வேட்பாளர்கள் பயப்படுகிறார்கள்

- பாறுக் ஷிஹான் -

2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான  திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான  ஏ.எல்.எம்.சலீமின்  தேர்தல் பிரச்சார அலுவலக திறப்புவிழா ஞாயிற்றுக்கிழமை (28)  நடைபெற்றது.

இதன்போது தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் தனது கருத்தில்

இம்முறை சாய்ந்தமருது மக்களை மாத்திரமன்றி ஏனைய கிராம மக்களை மரமோ மயிலோ ஏமாற்ற முடியாது. அதனால் இத்தேர்தலில் எமது கட்சி நான்கு ஆசனங்களை அம்பாறை மாவட்டத்தில் பெறும் என்பது எமது நம்பிக்கையாகும்.கடந்த காலங்களில் ஜனாசா என்ற சொல்லை வைத்து சுறுக்கு இட்டுக்கொண்டவர்கள் தற்போது அதில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார்கள்.எமது மக்களின் முன் சென்று கதைப்பதற்கு கூட பயப்பிடுவது மக்களுக்கு கிடைத்த வெற்றி தான் என்றார்.

1 comment:

  1. You have not given nomination in SLPP because they can get 2 seats without the amount of votes you take. So you were told ruling family to contest alone to spilt the Muslim votes in the district.

    ReplyDelete

Powered by Blogger.