Header Ads



இம்முறை புத்தளத்தின் சிறுபான்மை, பாராளுமன்ற கனவு நனவாகும் - எஹ்யா ஆப்தின்

சுமார் 33 வருட காலமாக புத்தளம் மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமையானது எமது சமூகத்தின் அபிலாசைகள் , அபிவிருத்திகள்  பின்னோக்கி சென்றதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. 

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எமது மக்கள் நீண்டகாலமாக பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்து ஒரு சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற முடியாமையானது கவலைக்குறிய விடயமாகும் என நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் மாகண சபை உறுப்பினர் ஆப்தின் எஹ்யா தெரிவித்திருந்தார். 

தொடரந்து கூறுகையில் புத்தள சிறுபான்மை மக்களின் கனவை நனவாக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளான முன்னாள் அமைச்சர்கள் ரிசாத் பதியுத்தீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் ஒன்று பட்டு கூட்டணிக்கு ஆதரவு தந்தமை எமது நீண்டகால பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் வெற்றிக்கு  வலுசேர்த்துள்ளது என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.