Header Ads



பொதி செய்யப்பட்ட போதை குளிசைகளை விழுங்கிய நபர் உயிரிழப்பு

13 போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிய சந்தேகநபர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் நேற்று -10- உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை - மாகந்தன பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பிலியந்தலை காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி பண்டாரகம - பிலியந்தலை வீதியில், தொரணவில சந்தியில், முச்சக்கர வண்டியில் சென்ற ஒருவர், குறித்த நபருக்கு பொதி ஒன்றை வழங்கியதை, உந்துருளியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.

இதன்போது, முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டதுடன், நேற்று உயிரிழந்த நபர் குறித்த தருணத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர், குறித்த நபர் தம்வசம் வைத்திருந்த பொலித்தீன் உறையில் பொதி செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரண பரிசோதனைகளின்போது, உயிரிழந்தவரின் வயிற்றிலிருந்து 13 போதைப்பொருள் உருண்டைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.