Header Ads



அமெரிக்க தன் சொந்த மக்கள் மீது, நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் - ஈரான்


அமெரிக்க தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவ்சாவி இதை தெரிவித்தார்.

ஈரான் தலைநகர் தெஹானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்க மக்களே உங்கள் மீதான அரசின் அடக்குமுறைகளை உலகம் கேட்கிறது. உலக நாடுகள் உங்களுடன் நிற்கிறது.

அமெரிக்க அதிகாரிகளே உங்கள் மக்கள் மீதான வன்முறையை நிறுத்துங்கள், அவர்களை சுவாசிக்க அனுமதியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈரானில் நடந்த போராட்டங்களின் போது ஈரான் மக்களுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குரல் கொடுத்தார். இந்த நிலையில் ஈரானும் இதே நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.