Header Ads



சட்டத்தை கையில் எடுப்பதற்கு, எவருக்கும் உரிமையில்லை - நாமல்

சட்டத்தை கையில் எடுப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

குத்தகை நிறுவனங்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மறைந்த சுனில் ஜயவர்தனவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குத்தகை வழங்கும் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. சட்டத்தின் புதிய பாதுகாவலன்,சட்ட நாயகன்.

    ReplyDelete

Powered by Blogger.