இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, பாக்கிஸ்தான் முன்கூட்டியே எச்சரித்திருந்தது - தூதுவர் தகவல்
இஸ்லாமிய தீவிரவாதிகளின் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் குறித்து பாக்கிஸ்தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருந்தது என பாக்கிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் முகமட் சாட் ஹட்டாக் தெரிவித்துள்ளார்
தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.ஐஎஸ் போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் இலங்கை தொடர்பிலான நடவடிக்கைகளை அவதானித்த பின்னர் இலங்கை அதிகாரிகளிற்கு அது குறித்து உரிய நேரத்தில் தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இலங்கை தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த தகவலையும் பயனற்றது என கருதமுடியாது என தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் முகமட் சாட் ஹட்டாக் அவ்வாறான தகவல்களை அலட்சியம் செய்வதால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்றவை இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment