ஜும்ஆ தொழுகையை நடாத்துவதில்லை - கொங்காவல ஜும்ஆ பள்ளிவாசல்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நடாத்துவதில்லை என மாத்தளை கொங்காவல ஜும்ஆ பள்ளிவாசல் தீர்மானித்துள்ளதாக அதன் நிர்வாக சபைத் தலைவர் ஜெனரல் சவீர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான அறிவித்தல் தமது பள்ளிவாசலுக்கு வெளியே காட்சிப்படுத்தப்படும் எனக்குறிப்பிட்ட அவர், ஜும்ஆவின்போது 50 பேர் என்ற வரையறையை பேணுவது நடைமுறைச்சாத்தியமற்றது என்பதாலேயே இத் தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment