Header Ads



சமூகத்திற்குள் கொரோனா பரவல் இல்லாதது ஒரு வெற்றியே – பவித்திரா

சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவல் இல்லாதது ஒரு வெற்றி என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முடக்கல் நிலை தளர்த்தப்பட்ட காலம் முதல் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படாதது ஒரு வெற்றி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை முற்றாக ஒழிப்பதற்கு மக்களின் ஆதரவு அவசியம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மூன்றுஇலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 9000 பேர் உயிரிழந்துள்ளனர் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீண்டும் பொதுவாழ்க்கை மே 28 ம் திகதி ஆரம்பமாகி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன என தெரிவித்துள்ள அமைச்சர் இதுவரையில் எந்த நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மக்களை தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.