Header Ads



அரந்தலாவயில் பிக்குகளை படுகொலை செய்தவரை, விசாரிக்குமாறு உயிர் தப்பியவர் உயர் நீதிமன்றத்தில் மனு

1987 இல் அரந்தலாவையில் பௌத்தமதகுருமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய மதகுரு ஒருவர் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைதாக்கல் செய்துள்ளார்.

அரந்தலாவை படுகொலையில் ஈடுபட்ட உயிருடன் உள்ள பயங்கரவாதி எவரும் உயிருடன் இருந்தால் அந்த பயங்கரவாதியை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என பௌத்தமதகுரு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அன்டவுல்பத்த புத்தசார தேரர் என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

1987இல் அரந்தலாவையில் 33 பௌத்தமதகுருமார் உட்பட 37 பேர் படுகொலைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.