Header Ads



ஹொண்டூராஸின் ஜனாதிபதிக்கு, கொரோனா தொற்று உறுதி

மத்திய  அமெரிக்க நாடான ஹொண்டூராஸின் ஜனாதிபதி ஜுவான் ஆர்லாண்டோ ஹெர்னாண்டஸிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

"வார இறுதியில் நான் சில அசௌகரியங்களை உணரத் தொடங்கினேன், இன்று நான் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கண்டறியப்பட்டேன்" என்று ஹெர்னாண்டஸ் தொலைக்காட்சி ஒன்றில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.

”ஓய்வெடுக்க பரிந்துரைத்துள்ளனர், ஆனால் நான் தொலைதூரத்தில் இருந்து எனது உதவியாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரது மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி, சிகிச்சை பெற அவர் தனிமையில் இருப்பார் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் இரண்டு உதவியாளர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹொண்டூராஸில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 9,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 330 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

No comments

Powered by Blogger.