Header Ads



வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலிதவை, ரணில் சென்று பார்வை

ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களுக்காக தாம் பிரச்சாரம் செய்யவுள்ளதாக களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்படும் ஒருவன் என்ற வகையில் தாம் நுவரெலியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சண்முகம் திருச்செல்வம் ஆகியோர் பார்க்கச் சென்றபோதே பாலித தெவரப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.