கருணாவிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் தொடர்பில்லை - தேசியப்பட்டியல் விவகாரம் பொய்
(இராஜதுரை ஹஷான்)
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இவரது பெயரை உள்ளடக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக இவர் குறிப்பிடும் செய்தி பொய்யானதாகும்.
கட்சிக்கு தொடர்பில்லாதவர் குறிப்பிடும் கருத்துக்கு பொறுப்பேற்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை -22- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Post a Comment