Header Ads



இனவாத அடிப்படையில் பழிவாங்கப்படும் சகீலா பானு - ஜனாதிபதி, ஆளுநர் தலையிடுவார்களா...?


(எமது சிறப்பு செய்தியாளர்)

சகீலா பானு 2011 ம் ஆண்டு இலங்கை விவசாய சேவையில் உள்வாங்கப்பட்டு வவுனியா மாவட்டத்துக்கான பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக அப்போதைய ஆளுநர் ஜெனறல் சந்திரஸ்ரீ இனால் நியமிக்கப்பட்டார்.  இவரது சேவை வவுனியாவில் அளப்பெரும் விவசாய அபிவிருத்தி யை ஏட்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. 

விவசாய உற்பத்திகளின்  ஏற்றுமதி யானது முதன் முதலாய் வடமாகாணத்தில் இருந்து இவரது சேவை காலத்திலேயே இடம் பெற்று சுமார்  இரண்டரை வருடங்களில் என்பது கோடி ரூபாய் வவுனியா வடக்கு பிரதேச செயலார்  பிரிவுக்கு உள்வரப்பட்டது.

எனினும்  இவரின் வேலை திறமை, தொழிலாண்மை, கல்வித்தரம்,  மொழியறிவு போன்ற பலவிடயங்களால் இவர் மீது பொறாமை கொண்ட மாகாண விவசாய பணிப்பாளர் இவற்றிட்கு எதிராக மனிதாபிமானமாட்ட பல செயட்பாடுகளில் ஈடு பட்டு வருகிறார். வாகனத்தினால் தாக்கியும் கூட உள்ளார்.

சகீலா பானுவை ஓரம் கட்டுவதட்கு பின்வரும் காரணங்கள் உள்ளன. 

1.சகீலா பானு வவுனியா விட்கு வருவதட்க்கு முன்பாக அரச விதை உட்பத்தி பண்ணை வவுனியா இல் சராசரியாக சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் இலாபமாக பெறப்பட்டிருந்தது எனினும் இவரது வருகைக்கு பின்பு  வருமானம் ஐந்து மில்லயன் ஆக உள்ளது.  இவ்வளவு காலமும் இருந்த இந்த வருமானம் மாகாண விவசாய பணிப்பாளர் திரு சிவகுமாருக்கு இல்லாமல் போய் விட்டது 

2. சகிலா பானுவே தற்போது வடகானத்தில் கடமை புரியும் ஏனைய உத்தியோகத்தர்களிலும் பார்க்க சேவை மூப்பில் உள்ளார். திரு சிவகுமாரின் நெருங்கிய நண்பியான ஒருவரை தனக்கு பின்  மாகாண பணிப்பாளராக நியமிக்க விருப்புடையநிலையில் சகீலா பானு வின் சேவை மூப்பும் திறமையும் சிவகுமாரின் இந்த கனவிட்கு முட்டு கட்டையாகிவிடும் 

3. அனைத்து உத்தியோகத்தர்களிலும் பார்க்க கூடிய கல்வித்தகமைகளை கொண்டுள்ளதோடு தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சேவை புரியும் ஆட்டலை  கொண்டவர். 
4. திரு சிவகுமாரிலும் பார்க்க சிறந்த பொது சன உறவாண்மையும் ஆளுமையும் கொண்டவர்

இவற்றின் காரணமாக சிவகுமாரினால் ஏட்படுத்தப்படட பிரச்சனைகளின் காரணமாக ஒதுங்கும் 2015ம்  ஆண்டு மத்திய அரசு விவசாய திணைக்களத்திட்கு இடமாட்டத்தினை  விண்ணப்பித்து கோரிப் பெற்று பின்னர் பரந்தன் விவசாய கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டு தனியொரு அதிகாரியாக இக்கல்லூரியை புதிதாக நிறுவி 3 வருட காலம் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவை புரிந்தார். இவ்வேலையில் வடமாகாண விவசாய துறையில் ஏட்பட்ட பெரும் வீழ்ச்சியும் சிவகுமாருடன் சேவையாட்ட முடியாத நிலையில் பல உத்தியோகத்தர்கள் வட மாகாண விவசாய திணைக்களத்தில் இருந்து வெளியேறியமையாலும்  முன்னைநாள் முதல் அமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா மற்றும் விவசாய அமைச்சர் களான திரு  ஐங்கரநேசன்  திரு சிவநேசன் மற்றும் மாகாண மகளிர் அலுவல்கள் அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரது தொடர்ந்த இரண்டு வருட காலமான விவசாய அமைச்சரிக்காண கோரிக்கையை அடுத்து மீண்டும் மீண்டும் சகீலா பானு வடமாகாண சபைக்கு கடைமைக்கு அமர்த்தப்பட்ட்டர். 

வடமாகாணசபை 2017 அக்டோபர் மாதம் கலைக்கப்பட்டதன் பின்பு பல அனாமதேய கடிதங்கள் ஆளுநருக்கும் வேறு இடங்களுக்கும் அனுப்பப்பட்டன. இவற்றிக்காண அவதானிப்புகளுக்கு முழுமையாக சகீலா பானு வினால் சரியான வகையில் பதில் அழிக்க பட்டுள்ளது.

மேலும் திருமதி M சார்லஸ் அவர்களின் கணவன் மன்மதராஜா 1992 ம்  ஆண்டு சகீலாபானு பயிலுனர் விவசாய போதனாசிரியராக முதல் நியமனம் பெட்ட காலத்தில் அவரது சேவை மூப்பு உத்தியகத்தராக பதவி வகித்தவர் ஆயினும் சகீலா பானு இலங்கை விவசாய சேவை பரீட்சை இல் சித்திஎய்தி  மன்மதராஜா விட்கு மேலதிகாரியாக கடமை யாட்டியவர். 1991 ம் ஆண்டு மன்னார் பண்டிவிரிச்சான்  கிராமத்தில் ஒரு சில தகாத வேலை களில் ஈடு பட்டதால் விடுதலை புலிகளால் பங்கரில் அடிக்கப்பட்டவர். பின்பு 1992 ம் ஆண்டு விடுதலை ஆகி அதே சில்மிசத்தை சிறுவயது பெண்களாய் இருந்த சகிலா பானு மற்றும் அவரது நண்பிகளிடமும் புரிந்து வசமாக வாங்கி கட்டியவர்.

இப்படியான தனிப்பட்ட பிரச்சனைகளையும் மதவாதத்தையும் சிவகுமார் பயன்படுத்தி காரணம் எதுவுமட்ட முறையில் பிரதம செயலார் ஊடாக ஆளுநர் மூலமாக தனிப்பட்ட பழிவாங்கலாக இந்த இட மாட்டம் ஏட்படுத்தப்பட்டுள்ளது. 

இடமாற்ற த்தை மேட்கொண்டதன் பின்பு சட்ட நடவடிக்கை களை தவிர்க்கும் முகமாக தற்போது கண்துடைப்பு விசாரணை ஒன்று நடைபெறுகின்றது. எனினும் சகீலா பானுவிட்ட்கு இடமாட்ட கடிதம் கிடைக்கும் வரையோ அல்லது இன்று வரையோ இந்த இடமாட்டத்துக்கான காரணம் கூறப்படவில்லை என்பதோடு சகல கடித தொடர்பாடல் களும் சிவகுமாரினால் உரிய பொறிமுறை இல்லாமல் மேட்கொள்ள படுகின்றது

ஓய்வு பெற்று மீண்டும் மீள் நியமனம் பெற்ற 64 வயதான திருமதி அருந்ததி வேல்சிவனந்தன் தற்போது பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக நியமிக்க பட்டுள்ளார். விவசாய விரிவாக்கத்தில் அனுபவம் இல்லாத இவர்  தற்போது நடைமுறை படுத்த பட்டு கொண்டிருக்கும் மூன்று பாரிய உலக வங்கி செயல் திட்டங்கள் ஸ்தம்பிதம் அடையும் வாய்ப்புக்களே அதிகமென்பதோடு கொரோனா தொற்று காலத்தில் வவுனியா மாவட்டத்தில் விவசாய திணைக்களம் சரிவர தொழில் படாமல் அரச அதிபரின் மனவருத்தத்தை  பல முறை  சம்பாதித்தது   என்பதால் ஏனைய உத்தியோகத்தர்களை அவருட்கு வழிநடத்தி உதவும் படி  கூட்டங்களில்  மாகாண பணிப்பாளரே கேட்டு கொண்டுள்ளார் என்பது வேடிக்கை. 

வடமாகாணத்தில் கடைமை புரிந்த ஒரே ஒரு முஸ்லீம் பதவி நிலை உத்தியோகத்தரின் வெளியேற்றம் என்பது மீண்டும் ஒரு 1990இனை ஞாபகப் படுத்துகின்றது. 

அத்தோடு மேல்மாகாண சபை,  பேராதெனிய போன்ற இடங்களில் கடமை புரிந்த காலங்களில் கூட சகீலாபானு வின் மேல் எவ்வித குற்றச்சாட்டு களும் இருந்ததில்லை.  ஆனால் சார்லஸ் அம்மணிக்கோ சென்ற இடமெல்லாம் விமர்சனங்களும் குற்றச்சாட்டு களுமே.  வவுனியா கச்சேரி உத்தியோகத்தர் கள் சாட்சி கூறுவர். இவரின் தனிப்பட்ட விரோதத்தை பாவித்து 25வருட காலமாக வடமாகாணத்தில் பணிபுரியும் சிவகுமார் தன்னை சுற்றி ஒரு மாபியா அமைப்பை எட்படுத்தி சகீலா பானு வை பழிவாங்குகிறார்

திருமதி சார்லஸ் அவர்கள் இறைச்சி கடை க்ளிட்க்கான கேள்வி கோரலில் லஞ்சம் பெட்டமைக்காக 2 வருட காலம்  பணி இடை நிறுத்தம் செய்ய பட்டு இருந்தார்  என்பதும் குறிப்பிட தக்கது.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளராக வும் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் கடமைபுரிந்தவர்  திரு. க. தேய்வேந்திரம். அவர்களுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆக கடந்த மார்ச்  நான்காம் திகதி நிரந்தர நியமனம் வழங்க பட்டு இருந்தது. எனினும்  அவர்களையும் எவ்வித காரணமும் இல்லாமல் உடனடியாக கொழும்பு இட்கு இடமாட்டம் வழங்க பட்டுள்ளதோடு வவுனியா விவசாய திணைக்கள அதிகாரி கள் சிலருக்கும் உடனடி இடமாற்றம் வழங்க பட்டுள்ளது.

வவுனியா அரச விதை உட்பத்தி பண்ணையில் ஐந்து லட்சம் வருமானம் பெறப்பட்ட போது இல்லாத முறைகேடு கள் ஐந்து மில்லியன் நிகர லாபம் பெறப்படும் போது எப்படி நிகழும்.  யாவுமே மாகாண பணிப்பாளர் சிவகுமாரின் திட்டமிட்ட கைங்காரியமே.

1 comment:

Powered by Blogger.