Header Ads



பொதுஜனபெரமுன இம்முறை, தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடாதா...?

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன இம்முறை தேர்தல் விஞ்ஞாபனம் எதனையும் வெளியிடாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசத்தினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலின்போது வெளியிட்ட கொள்கை பிரகடனத்தையே இம்முறையும் மக்கள் முன்னிலையில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன இம்முறை தேர்தல் பிரச்சார பேரணிக்கு பதில் செய்தியாளர் மாநாடுகளையே நடத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரவழிமுறைகளை பின்பற்றி செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடுவீடாக சென்று பிரச்சாரத்திற்கான திட்டமும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.