வேட்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யமாட்டோம், மக்களின் மனங்களை வென்றுள்ளோம்
சேறு பூசும் அரசியலிலிருந்து விலகியிருந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து அவர்களுக்கு சேறு பூசும் செயற்பாடுகளில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் இவ்வாறு சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் மக்களின் மனங்களை வென்றுள்ளதாகவும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்திற்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் ஒருபோதும் போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களிடம் வாக்கு கேட்பதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment