Header Ads



எந்த அச்சமும் இல்லாமல் பிரதமராகப் பொறுப்பேற்பேன், சிறிகொத்தாவின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி வெற்றி பெற்ற பிறகு சிறிகொத்தாவின் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி ஒருபுறமும், மறுபுறம் பிரதமரும் இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, எந்த அச்சமும் இல்லாமல் வென்று பிரதமராகப் பொறுப்பேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவையும் மக்கள் ஆணையுடன் பொறுப்பேற்போம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.