ஜேர்மன் நிறுவனங்கள் பல, இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம்
கொரோனா வைரஸ் தொற்று நிலமைக்கு பின்னர் ஆசியாவின் மொத்த வர்த்தக சந்தை இலக்கை முன்னிலைப்படுத்தி ஜேர்மன் நாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வணிக சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதானி அன்றீஸ் வாகன் றோத தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஆசிய நாடுகள் மத்தியில் இலங்கை , வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நாடுகளில் சுகாதார நிலமை மேம்பட்டுள்ளதை இது எடுத்துக்காட்டகிறது. இலங்கை பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கொண்டுள்ளது என்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உகந்த சூழ்நிலை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
Post a Comment