Header Ads



எரிந்துக் கொண்டிருந்த நிலையில், சடலம் கண்டுபிடிப்பு - தம்புள்ளையில் சம்பவம்

டயரை பயன்படுத்தி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று தம்புள்ளை மேல் எருவ்வல, கோன வெவ பிரதேசத்தில் அமைந்துள்ள பாழடைந்த இட​மொன்றில் இருந்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

பிரதேசவாசிகள் வழங்கிய தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்ற போது, சடலம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று (18) பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தம்புள்ளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதன்போது, கொலை செய்யப்பட்ட நபர் டயர் ஒன்றினை பயன்படுத்தி எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும், சம்பவ இடத்திற்கு அருகில் இருந்து மண்வெட்டி ஒன்றும் மற்றும் மதுபான போத்தல்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸாரினால் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்ட பின்னர் தம்புள்ளை நீதவானல் குறித்த இடத்தில் நீதவான் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.