Header Ads



வேட்பாளர்கள் சகலரையும் கொழும்புக்கு, அழைத்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சஜித்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் அனைவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து ஒரு நாள் கருத்தரங்குடன் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கிராம மட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக 15 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் அந்த குழுக்களில் 70 வீதமான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார கூறியுள்ளார்.

அதேவேளை கொழும்பில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறும் ஒரு நாள் கருத்தரங்கில் தேர்தல் பிரச்சாரம், அது சம்பந்தமான வழிமுறைகள் குறித்த வேட்பாளர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் எனவும் கருத்தரங்கில் இதற்கே முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் இந்த கருத்தரங்கில் 291 வேட்பாளர்கள் கலந்துக்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் வலையமைப்பொன்று செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. ETKANAVEY, HAMBANTOTAYIL THOLVI,
    NICHAYAM KOLUMBIL PADUTHOLVI.!!

    ReplyDelete

Powered by Blogger.