Header Ads



மைத்திரிபாலவை பாராளுமன்றத்திற்கு அல்ல, சிறைச்சாலைக்கே அனுப்ப வேண்டும் - நாமல் குமார


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்ல வேண்டியது சிறைச்சாலைக்கே அன்றி நாடாளுமன்றத்திற்கு அல்ல என நாமல் குமார தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பந்தமாக தான் பொறுப்புக் கூற வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திற்கு பொலிஸ் மா அதிபரை கூட அழைக்கவில்லை.

நாட்டின் அனைத்து பாதுகாப்பு துறைகளுக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி தனது பொறுப்பில் இருந்து விலகி செல்ல முடியாது. அவரை அனுப்ப வேண்டியது நாடாளுமன்றத்திற்கு அல்ல சிறைச்சாலைக்கு எனவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

நாமல் குமார நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை கொலை செய்ய சதித்திட்டம் இருப்பதாக கூறி ஒலித் தட்டுக்களை வெளியிட்ட காரணத்தினால், அப்போது பரப்பரப்பாக பேசப்படும் நபராக இருந்தார்.

1 comment:

  1. அவரைச் சிறைக்கு அனுப்ப கைகோர்த்துச் செல்வதற்கு மிகவும் தகுதியானவன் நீர் தான். உம்முடன் சேர்த்து அவரையும் சிறைக்கு அழைத்துச் சென்றால் பெரும் கட்சிகளுக்கும் சிறுபான்மையினருக்கும் தற்காலிகமாகவேனும் கொஞ்சம் அமைதியாக இருப்பார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.