ஆட்டநிர்ணய சதி குறித்து விசாரணைகள் அவசியம்- நாமல் ராஜபக்ச
முன்னாள் அமைச்சர் வெளியிட்டுள்ள ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை நாங்கள் மிகவும் நேசிக்கும் விளையாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என நாமல் ராஜபக்ச டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி பக்கச்சார்பற்ற விசாரணைகளை ஆதாரங்களை அடிப்படையாக வைத்து முன்னெடுக்குமாறு ஐசிசியையும் விளையாட்டு துறை அமைச்சினையும் கேட்டுக்கொள்கின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment