Header Ads



"பாடசாலை மாணவர்களுக்கு இம்முறை ஒகஸ்ட் விடுமுறை வழங்கப்படாது"


பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இந்தமுறை வழங்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் என் எம் எம் சித்ராநந்த இதனை தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையினாலேயே ஒகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையை ரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி 10, 12 மற்றும் ஐந்தாம் தர வகுப்புகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 6 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.