Header Ads



க‌ல்முனை முஸ்லிம்க‌ளின் வாழ்விட‌ங்க‌ள், பொருளாதார‌ நிலைய‌ங்க‌ள் த‌மிழ் பிர‌தேச‌ செய‌ல‌க‌ எல்லைக்குள் க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ உள்வாங்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌

முஸ்லிம் காங்கிர‌சின் கடந்த. 20 வ‌ருட‌ கால‌த்தில் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் எந்தவொரு பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு காண‌ப்ப‌டவில்லை எனவும்    முஸ்லிம் காங்கிரஸுக்கு தொட‌ர்ந்தும் வாக்க‌ளித்து வ‌ரும் க‌ல்முனை ம‌க்க‌ள் மிக‌ப்பெரும் பிர‌ச்சினைக‌ளுக்கு முக‌ம் கொடுத்து வருகின்றனர் எனவும்  உலமாக்கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் குற்றம் சாட்டியுள்ளார்  அவரது அலுவலக்த்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

வாழ்விட‌ ப‌ற்றாக்குறை. ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ ஏழைக‌ளுக்கு சொந்த‌மாக‌ வீடுக‌ள் இல்லை. ஒரு வீட்டில் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். வீடில்லாமை கார‌ண‌மாக‌ திரும‌ண‌ம் செய்ய‌ முடியாத‌ ஏழைக‌ள் ப‌ல்லாயிர‌ம் பேர் உள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளுக்கான‌ வீட்டுத்திட்ட‌ம் அவ‌ச‌ர‌ தேவையாகும்.

வீதி அபிவிருத்திக‌ள். ப‌ல‌ வீதிக‌ள் அரையும் குறையுமாக‌ கொந்த‌ராத்து க‌மிச‌னுக்காக‌ போட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. அர‌சாங்க‌த்தின் ப‌ண‌த்தில் 50 வீத‌த்தை க‌ள‌வெடுத்துவிட்டு 50 வீத‌மே செல‌வு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இத‌ன் கார‌ண‌மாக ப‌ல‌ வீதிக‌ள் போட‌ப்ப‌ட்ட‌ ஓரிரு வ‌ருட‌ங்க‌ளில் குன்றும் குழியுமாக‌ உள்ள‌ன‌. 

க‌ரையோர‌ க‌ட‌ல‌ரிப்புக்கு ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல் எதுவும் இன்று வ‌ரை இல்லை.

க‌ல்முனையில்  அர‌ச‌ அணுச‌ர‌னையில் த‌ர‌மிக்க க‌லாசார‌ ம‌ண்ட‌ப‌ம் ஒன்றில்லை. இத‌னால் ஏழைக‌ள் வீதிக‌ளில் த‌ம் திரும‌ண‌ நிக‌ழ்வுகளை ந‌ட‌த்த‌ வேண்டியுள்ள‌து

வ‌ய‌ற்காணிக‌ளுக்கான‌ ச‌ரியான‌ நீர்ப்பாச‌ண‌ வ‌ச‌திக‌ள் இல்லை. இத‌ன் கார‌ண‌மாக‌ இர‌ண்டு போக‌ம் செய்ய‌க்கூடிய‌ ப‌ல்லாயிர‌ம் ஏக்க‌ர் காணிக‌ளில் ஒரு போக‌மே செய்ய‌ப்ப‌டுகிற‌து.

மீன‌வ‌ர்க‌ளின் ந‌ல‌வுக்கான‌ எந்த‌ க‌ட்ட‌மைப்பும் இல்லை. அவ்வ‌ப்போது தேர்த‌ல் கால‌ங்களில் க‌ட்சிக‌ள் மீன‌வ‌ட்க‌ளை அழைத்து அது செய்வோம் இது செய்வோம் என‌ மொட்டை அடிப்ப‌துட‌ன் ச‌ரி.

க‌ல்முனை முஸ்லிம்க‌ளின் வாழ்விட‌ங்க‌ள், பொருளாதார‌ நிலைய‌ங்க‌ள் த‌மிழ் பிர‌தேச‌ செய‌ல‌க‌ எல்லைக்குள் க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ உள்வாங்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.  க‌ல்முனை முஸ்லிம்க‌ளின் ஓட்டு பெற்ற‌ க‌ட்சிக‌ள் அர‌ச‌ அமைச்ச‌ர்க‌ளாக‌ இருந்தும் அவ‌ற்றை தீர்க்க‌ முதுகெலும்ப‌ற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.

அத‌னால்த்தான் சொல்கிறோம். ந‌ம‌து க‌ல்முனை ம‌ண்ணுக்கேற்ற‌ க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்தி ந‌ம்மை நாமே ஆள்வோம். அர‌சின் ஆத‌ர‌வுக்க‌ட்சியான‌ உல‌மா க‌ட்சியை க‌ல்முனை ம‌க்க‌ள் வெல்ல‌ வைப்ப‌த‌ன் மூல‌ம் அமைய‌ப்போகும் அர‌சாங்க‌த்தின் மூல‌ம் மேற்ப‌டி பிர‌ச்சினைக‌ளை இல‌குவாக‌ தீர்க்க‌ முடியும்.

1 comment:

  1. நீங்கள் தலைவணங்கும் உங்கள் தலைவரிடம் போய் முறையிடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.