ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற, சஜித் தயாராகுவதாக ஹரீன் அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமரானால் அவர் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட முடியும் ஒழுக்கமுள்ள சமூகத்தினை உறுதிசெய்ய முடியும் என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்
.அரசாங்கத்தின் சில சக்திகள் ஜனாதிபதி தனது கொள்கைகளை முன்னெடுப்பதற்கு தடைபோடுகின்றன என ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தான் எந்த கொள்கைகளிறகாக தெரிவு செய்யப்பட்டரோ அந்த கொள்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்;துள்ளார்.
ஜனாதிபதி தனது உறுதிமொழிகளிற்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தனது கொள்கை பிரகடனத்தை அடுத்த வாரம் வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment