Header Ads



தேர்தல் திகதியை கேள்விக்குட்படுத்தி செய்யப்பட்ட மனுக்கள் எந்தவித அடிப்படைகளும் அற்றவை - ரணில்

தேர்தல் திகதியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தமை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடிசெய்யும் என்பது என்கு தெரிந்திருந்து, என தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாகவே ஐக்கியதேசிய கட்சி நீதிமன்றம் செல்லவில்லை என குறிப்பிட்டுள்ளார்.தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் ஜேவிபியிற்கும் இது தெரிந்திருந்து என தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் இதன் காரணமாகவே அந்த கட்சிகள் நீதிமன்றம் செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திகதியை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எந்தவிதமான சட்டபூர்வமான அடிப்படைகள் அற்றவை இதனை நான் ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் செல்வதில்லை என முடிவெடுத்தேன் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.