Header Ads



சிறையில் வைக்கப்பட்டிருந்த போது நாள்தோறும், சஜித் என்னுடன் தொலைபேசியில் பேசினார் - ராஜித

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன செல்லிடப்பேசி பயன்படுத்தியுள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ராஜித தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் சஜித் பிரேமதாச, தம்முடன் நாள் தோறும் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தம்மை தைரியப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜித, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் சிறைச்சாலைகளில் செல்லிடப்பேசி பயன்படுத்துவது முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. He is not sentenced to jail, but only remanded. Why its illegal to use cell phone while in remand?

    ReplyDelete
  2. SHATTAM ELLORUKKUM SHAMAMENRAAL,
    RAJITHAVAIUM, SAJITHAIUM, KAITHUSHEIYA
    VENDUM.
    AATCHIKKI VARUMUN IPPADI
    SHARVAATHIKAARAM ENRAAL,
    PIRAKU EPPADI IRUKKUM...?

    ReplyDelete

Powered by Blogger.