Header Ads



ஹக்கீம் - றிசாத் போன்ற இனவாதிகளின் துணையுடன், ஆட்சியைப் பிடிக்க சஜித் எதிர்பார்க்கிறார் - திலங்க


இலங்கையின் அபிவிருத்தியில் சிறுபான்மை இனங்களின் தீவிரவாதம் பெரும் தடையாக அமைந்திருப்பதாக பொதுஜன பெரமுணவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் திலங்க சுமதிபால குற்றம் சாட்டியுள்ளார்.

கல்கிஸ்ஸை, சென்.சில்வெஸ்டர் வீதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நகரமன்ற உறுப்பினர் திலக் அபொன்சு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சுதந்திரம் கிடைத்த போது இலங்கையின் பொருளாதாரம் ஏனைய ஆசிய நாடுகளுக்குச் சவால் விடும் வகையில் அமைந்திருந்தது.

ஆனால் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களின் அநாவசியமான அரசியல் போராட்டங்கள், அதன் பின் சுமார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்த தமிழரின் தீவிரவாதப் போராட்டம், தற்போது முஸ்லிம்களின் மத்தியில் தோன்றியுள்ள சஹ்ரான் குழுவின் தீவிரவாதம் என்பன எமது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையாக அமைந்துள்ளன.

இவ்வாறான தடைகளை முடக்கி, அதனுடன் தொடர்புடையவர்களை ஒடுக்கி சிங்கள இனத்தவர் கௌரவத்துடன் வாழ்வதற்கும், அதன் கீழ் ஏனைய இனங்கள் சௌகரியமாக வாழ்வதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். அதற்காக பொதுஜன பெரமுணவுக்கு வாக்களிக்க வேண்டும்.

சஜித் தற்போதைக்கு மனோ கணேசன், திகாம்பரம், ஹக்கீம், றிசாத் போன்ற இனவாதிகளையும், பயங்கரவாதத்துக்கு துணை போன சம்பந்தன் போன்றோரின் துணையையும் கொண்டு ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றார். அது கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும் வரை நிறைவேறப் போவதில்லை.

அதே நேரம் அவ்வாறு சஜித் பிரமதராக வந்தாலும் கூட ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்குத் தேவையான முறையில் ஆட்சியைக் கொண்டு செல்வாரே தவிர, சஜித் தரப்பினர் எதிர்பார்க்கும் விடயங்கள் சாத்தியப்படப் போவதில்லை.

எனவே ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி சிங்கள மக்களின் பாதுகாப்பான வாழ்வுக்காக பொதுஜன பெரமுணவுக்கு வாக்களிக்க முன்வாருங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் பொதுஜன பெரமுணவின் சக வேட்பாளராக ஜனக ரணவக்கவும் கலந்து கொண்டிருந்தார்.

3 comments:

  1. dear people

    do not cast vote following party
    1.UNP
    2.PODU JANAJA PARAMUNA
    3.SLFP
    OTHER THAN ABOVE PARTY , YOU CAST VOTE ANY PARTY

    ReplyDelete
  2. இந்த நாடு இந்த நிலைக்கு போக இங்குள்ள முட்டாள் சிங்கள இனவாதிகள் மட்டுமே காரணம்

    ReplyDelete
  3. ​டெலிகொம்மைச் சூறையாடி, கோடான கோடி கொள்யைடித்த இந்த சுமதிபால வடிகட்டிய இனவாதி, முஸ்லிம் என்றால் அவருக்குத் தென்படுவது இனவாதமும் துவேசமும் மட்டும்தான்.பச்சைக் கண்ணாடி அணிந்தவனுக்கு எதுவும் வெண்மையாத் தெரியுமா?

    ReplyDelete

Powered by Blogger.